தமது வேதன பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கோரி விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் சிலர் ஆரம்பித்துள்ள தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தையடுத்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி செயலகம் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“தேசிய பலவேகய” அமைப்பின் தலைவர் ஹிரு செய்திப் பிரிவுக்கு கருத்து வெளியிடுகையில், இன்று முற்பகல் இடம்பெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தைக்கு தமது அமைப்பின் 3 உறுப்பினர்களை அழைத்துச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் சிலர் ஆரம்பித்துள்ள தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டம் கொழும்பு-கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories