கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1500 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளுடன் ஒரு சந்தேக நபர் கல்பிட்டி கந்தக்குளி கடற் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை மீட்கப்பட்ட குறித்த பீடி சுற்றும் இலைகளின் பெறுமதியானது சுமார் 80 இலட்சத்திற்கு அதிகம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து படகு மூலம் குறித்த பீடி சுற்றும் இலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை டிக்வெல்ல பிரதேசத்தில் வசித்து வருபவர் என்பதோடு, குறித்த நபரை கல்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று காலை மீட்கப்பட்ட குறித்த பீடி சுற்றும் இலைகளின் பெறுமதியானது சுமார் 80 இலட்சத்திற்கு அதிகம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து படகு மூலம் குறித்த பீடி சுற்றும் இலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை டிக்வெல்ல பிரதேசத்தில் வசித்து வருபவர் என்பதோடு, குறித்த நபரை கல்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories