நாளை முதல் காலநிலையில் மாற்றம்..

Saturday, 21 September 2019 - 16:17

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..
நாட்டின் தென்மேற்கு திசையில் நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் ஓரளவு அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை, நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பலப்பிட்டி முதல் காலி ஹம்பாந்தொட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் நாளைய தினம் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என தெரிவிக்கபபட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips