தலைக்கவசம் அணியாததால் பேருந்து சாரதிக்கு அபராதம்

Sunday, 22 September 2019 - 21:44

%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
தலைக்கவசம் அணியாமல் பேருந்து செலுத்தியதாக தெரிவித்து, சாரதியொருவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று உத்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் நொய்டா நகரை சேர்ந்தவர் நிரன்கர் சிங். இவர் அப்பகுதியில் பள்ளிகள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு பேருந்துகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவரது நிறுவனத்துக்கு கடந்த செப்டம்பர் 11ம் திகதி அம்மாநில போக்குவரத்து துறை சார்பில் ரூ.500 தண்டப்பண பத்திரம் அனுப்பப்பட்டது.

அந்த பத்திரத்தில் அபராதம் விதித்ததற்கான காரணத்தை கண்டு நிரன்கர் சிங் அதிர்ச்சி அடைந்தார்.

அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் பேருந்து சாரதி ஒருவர் தலைக்கவசம் அணியாமல் பேருந்து ஓட்டியதாகவும், அதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.

இதுகுறித்து நிரன்கர் சிங் கூறுகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எங்கள் மீது தவறு இருந்தால் அபராதம் செலுத்த தயார். ஆனால் போக்குவரத்து துறையின் இந்த பொறுப்பற்ற செயல்களால் தினமும் நூற்றுக்கணக்கான சாரதிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips