காலி வீதியின் தெஹிவளை மேம்பாலத்தில் உந்துருளியை செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தெஹிவளை மேம்பாலத்தில் உந்துருளிகள் பயணிப்பதன் காரணமாக, அதிகளவான விபத்துகள் இடம்பெறுவதனால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கல்கிஸை பிரிவு வீதி பாதுகாப்பு குழுவும், இரத்மலானை வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய கடந்த 10 ஆம் திகதி முதல் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மேம்பாளத்தில் உந்துருளிகள் பயணிக்கத் தடை என பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உந்துருளிகள் அதில் பயணிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மேம்பாலத்தில் உந்துருளிகள் பயணிப்பதன் காரணமாக, அதிகளவான விபத்துகள் இடம்பெறுவதனால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கல்கிஸை பிரிவு வீதி பாதுகாப்பு குழுவும், இரத்மலானை வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய கடந்த 10 ஆம் திகதி முதல் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மேம்பாளத்தில் உந்துருளிகள் பயணிக்கத் தடை என பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உந்துருளிகள் அதில் பயணிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories