அவிசாவளை பிரதேசத்தில் போதை பொருளுடன் 25 பேர் கைது..

Sunday, 13 October 2019 - 10:43

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+25+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
அவிசாவளை - தெம்பிலியான பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் ஒன்றில் 25 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

4 யுவதிகளும், 21 இளைஞர்களும் நேற்றிரவு இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 1.3 கிராம் ஹெரோயின், 525 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு, காலி, மாத்தறை, எம்பிலிப்பிட்டி, தெஹியோவிட்ட மற்றும் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips