நாட்டின் பல பாகங்களிலும் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கலா ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக புத்தளம் - மன்னார் வீதியின் எழுவன்குளம் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
தற்போது எழுவன்குளம் பகுதியில் உள்ள பாலம் ஒன்றின் சுமார் 3 அடி வரை நீர் பாய்வதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மன்னார்வரை பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாரியபொல பகுதியில் உள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக நேற்று பிற்பகல் முதல் குருணாகல் - மாஸ்பொத, வாரியபொல உள்ளிட்ட பிரதேசங்கள் சிலவற்றில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்;ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார்.
பசறை, எல்ல மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கலா ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக புத்தளம் - மன்னார் வீதியின் எழுவன்குளம் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
தற்போது எழுவன்குளம் பகுதியில் உள்ள பாலம் ஒன்றின் சுமார் 3 அடி வரை நீர் பாய்வதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மன்னார்வரை பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாரியபொல பகுதியில் உள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக நேற்று பிற்பகல் முதல் குருணாகல் - மாஸ்பொத, வாரியபொல உள்ளிட்ட பிரதேசங்கள் சிலவற்றில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்;ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார்.
பசறை, எல்ல மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories