கடந்த சனிக்கிழமை ஜப்பானை தாக்கிய பாரிய சூறாவளியினை அடுத்து, தற்போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
60 வருடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட இந்த பாரிய சூறாவளியில் குறைந்தது 40 பேர் பலியானதுடன், 16 பேர் காணாமல் போய் உள்ளனர்.
பாரிய காலநிலை சீர்கேடு காரணமாக ஜப்பானில் நடைபெறும் ரக்பி உலக கிண்ண போட்டிகளில் மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
எப்படியிருப்பினும், ஜப்பான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி திட்டமிட்ட வகையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 28-21 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வென்று முதன் முறையாக கால் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அதேவேளை, நாகனோ தொடரூந்து கூடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 அதிவேக தொடரூந்துகள் வெள்ளம் காரணமாக முற்றாக அழிந்து போய் உள்ளன.
“புளற்” என அழைக்கப்படும் இந்த அதிவேக தொடரூந்து ஒவ்வொன்றும் 3 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
60 வருடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட இந்த பாரிய சூறாவளியில் குறைந்தது 40 பேர் பலியானதுடன், 16 பேர் காணாமல் போய் உள்ளனர்.
பாரிய காலநிலை சீர்கேடு காரணமாக ஜப்பானில் நடைபெறும் ரக்பி உலக கிண்ண போட்டிகளில் மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
எப்படியிருப்பினும், ஜப்பான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி திட்டமிட்ட வகையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 28-21 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வென்று முதன் முறையாக கால் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அதேவேளை, நாகனோ தொடரூந்து கூடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 அதிவேக தொடரூந்துகள் வெள்ளம் காரணமாக முற்றாக அழிந்து போய் உள்ளன.
“புளற்” என அழைக்கப்படும் இந்த அதிவேக தொடரூந்து ஒவ்வொன்றும் 3 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories