ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அடங்கிய முத்திரையிடப்பட்ட பொதியை, அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் இன்று ஆரம்பமாகியுள்ளது.
ஒவ்வொரு மாவட்ட செயலாளர் காரியாலயங்களுக்குமான முத்திரையிடப்பட்ட வாக்குச்சீட்டு அடங்கிய பொதி, அஞ்சல் சேவையிடம் கையளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொதிகள், ஒரு வார காலத்துக்குள் அரசாங்க நிறுவனங்களுக்கு அஞ்சல் மூல வாக்குப் பதிவை மேற்கொள்வதற்காக கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories