பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 62 பேர் பலி...

Saturday, 19 October 2019 - 8:17

%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+62+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 62 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் நன்கஹர் யேபெயசாயச மாகாணத்தில் நேற்றைய தினம் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக எவரும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் பொதுமக்கள் இறப்பு எண்ணிக்கை கோடை காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் தகவல்களின் அடிப்படையில், கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ஆயிரத்து 174 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips