மெராத்தான் இராஜதந்திர கூட்டத்திற்குப் பின்னர், வடக்கு சிரியாவில் குர்திஸ்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடர்பாக 'வரலாற்று' ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டதை துருக்கியும் ரஷ்யாவும் ஏற்றுக்கொண்டுள்ளன.
அமெரிக்க துருப்புக்கள் அந்தப் பகுதியிலிருந்து விலகிய பின்னர் இரண்டு தரப்புகளும் துருக்கி-சிரியா எல்லையில் துருப்புக்களை நிறுத்தியிருந்தன.
சிரியாவின் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி ஒரு தாக்குதலை நடத்தியதுடன், பின்னர் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் துருக்கியும் எல்லையில் கூட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, குறித்த பகுதியில் அதிகாரம் மாறும் தன்மையை மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தலையீட்டுடன் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கும், துருக்கியப் படைகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம் முடிவடைவதற்கு சற்று முன்னதாகவே இந்த புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க துருப்புக்கள் அந்தப் பகுதியிலிருந்து விலகிய பின்னர் இரண்டு தரப்புகளும் துருக்கி-சிரியா எல்லையில் துருப்புக்களை நிறுத்தியிருந்தன.
சிரியாவின் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி ஒரு தாக்குதலை நடத்தியதுடன், பின்னர் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் துருக்கியும் எல்லையில் கூட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, குறித்த பகுதியில் அதிகாரம் மாறும் தன்மையை மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தலையீட்டுடன் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கும், துருக்கியப் படைகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம் முடிவடைவதற்கு சற்று முன்னதாகவே இந்த புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories