சில புகையிரத சேவைகளில் மாற்றம்...

Thursday, 14 November 2019 - 13:59

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D...
எதிர்வரும் 27ம் திகதி முதல், வடக்கு மற்றும் கரையோர தொடருந்து சேவைகளில் நேரமாற்றம் செய்யப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் தொடருந்து, மாலை 6 மணிக்கு காங்கேசந்துறையில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 9 மணிக்கு அந்த தொடருந்து தமது பயணத்தை ஆரம்பிக்கும்.

இதற்கிடையில் பெலியத்தயில் இருந்து மருதானை வரையில் பயணிக்கும் நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து, 27ம் திகதிக்குப் பின்னர் பெலியத்த தொடருந்து நிலையத்தில் இருந்து காலை 6.15க்கு தமது பயணத்தை ஆரம்பிக்கும்.

அந்த தொடருந்து மருதானை தொடருந்து நிலையத்தில் பிற்பகல் 3 மணிக்கு பெலியத்தை நோக்கி புறப்படும்.

அதேநேரம் பிற்பகல் 2.15 மணிக்கு பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த காலு குமாரி தொடருந்து, 27ம் திகதிக்குப் பின்னர் 1.35 மணிக்கு தமது பயணத்தை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips