அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இரண்டு மாணவர்கள் பலியாகினர்.
அத்துடன், மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
வடக்கு லொஸ் ஏஞ்சல்ஸின் சென்டா பகுதியில் உள்ள இரண்டாம் நிலை பாடசாலை ஒன்றில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 16 வயது மாணவியும், 14 வயது மாணவனும் பலியாகினர்.
அத்துடன், 14 மற்றும் 15 வயதுடைய மாணவிகள் இருவரும், 14 வயது மாணவனும் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபரான மாணவன் காயமடைந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் சந்தேகநபரின் 16ஆவது பிறந்ததினமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துக்கான காரணம் உடனடியாக வெளியாகாத நிலையில், சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories