பிரிட்டிஷ் அரசியலில் ரஷ்யா தலையிடுவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, நாடாளுமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.
பிரிட்டிஷ் தேர்தல் எதிர்வரும் டிசெம்பர் 12 ஆம் திகதி நிறைவடைந்ததன் பின்னர் குறிப்பிட்ட விபரங்கள் வெளியிடப்படும் என பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பிரண்டன் லீவிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற புலனாய்வு தரப்பினர் மற்றும் பாதுகாப்பு குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
வெளியிடப்படாத அறிக்கையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, பிரிட்டிஷ் விடயத்தில் ரஷ்யா தலையிடுவது உறுதிப்படுத்தப்பட்டால், பிரெக்சிட் கருத்து கணிப்பு செயல்பாட்டினை பாதிக்கக்கூடும் என பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் தேர்தல் எதிர்வரும் டிசெம்பர் 12 ஆம் திகதி நிறைவடைந்ததன் பின்னர் குறிப்பிட்ட விபரங்கள் வெளியிடப்படும் என பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பிரண்டன் லீவிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற புலனாய்வு தரப்பினர் மற்றும் பாதுகாப்பு குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
வெளியிடப்படாத அறிக்கையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, பிரிட்டிஷ் விடயத்தில் ரஷ்யா தலையிடுவது உறுதிப்படுத்தப்பட்டால், பிரெக்சிட் கருத்து கணிப்பு செயல்பாட்டினை பாதிக்கக்கூடும் என பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Follow US
Most Viewed Stories