முல்லைத்தீவு - புதுக்குடியிறுப்பு - உடையார்கட்டு பகுதியில் 52கிலோகிராமுக்கும் அதிக எடை கொண்ட வெடிபொருட்களை அனுமதிபத்திரம் இன்றி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப் படையினரால், நேற்று அவர் கைதுசெய்யப்பட்டார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர், உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சில இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை மீட்டெடுத்து, அவற்றில் வெடிக்கும் பாகத்தை அகற்றி, வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு அவற்றை அவர் விற்பனை செய்வதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேநபர், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேநேரம், குறித்த வெடிபொருட்களின் தன்மை குறித்து ஆராய்வதற்காக அவற்றை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப் படையினரால், நேற்று அவர் கைதுசெய்யப்பட்டார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர், உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சில இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை மீட்டெடுத்து, அவற்றில் வெடிக்கும் பாகத்தை அகற்றி, வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு அவற்றை அவர் விற்பனை செய்வதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேநபர், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேநேரம், குறித்த வெடிபொருட்களின் தன்மை குறித்து ஆராய்வதற்காக அவற்றை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Follow US
Most Viewed Stories