தகவலறிந்த ஒரே ஒரு இலங்கையர்...

Saturday, 07 December 2019 - 13:39

%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D...
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் கட்டத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தகவலறிந்த ஒரே ஒரு இலங்கையர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்னவே என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாராம பகுதியில் நேற்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரை விசாரணைக்கு உட்படுத்தவேண்டியது அத்தியாவசியமாகும்.

நீதிமன்றமும் இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதற்கான நாடகமே அந்த சம்பவமாகும்.

அதில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips