ஈராக்கின் நிலைமை மற்றும் ஈரான் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோர் ஆலோசித்துள்ளனர்.
கனேடிய பிரதமர், டொனால்ட் ட்ரம்புடன் நேற்று மேற்கொண்ட உரையாடலின்போது குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், ஈரானில் உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளின் அவசியம் தொடர்பிலும் இருவரும் அவதானம் செலுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரேன் விமான விபத்தில் 82 ஈரானியர்கள், 63 கனேடியர்கள் உட்பட 176 பேர் பலியாகினர்.
விபத்துக்குள்ளான உக்ரேன் விமானத்தின் கருப்பு பெட்டியை, போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ ஒப்படைக்க போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் மீட்புப் பணியாளர்கள் தெஹ்ரானில் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்றைய தினம் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், குறித்த கருப்பு பெட்டியை ஆய்வுகளுக்காக கையளிப்பதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்ற நிலைக்கு மத்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய பிரதமர், டொனால்ட் ட்ரம்புடன் நேற்று மேற்கொண்ட உரையாடலின்போது குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், ஈரானில் உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளின் அவசியம் தொடர்பிலும் இருவரும் அவதானம் செலுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரேன் விமான விபத்தில் 82 ஈரானியர்கள், 63 கனேடியர்கள் உட்பட 176 பேர் பலியாகினர்.
விபத்துக்குள்ளான உக்ரேன் விமானத்தின் கருப்பு பெட்டியை, போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ ஒப்படைக்க போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் மீட்புப் பணியாளர்கள் தெஹ்ரானில் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்றைய தினம் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், குறித்த கருப்பு பெட்டியை ஆய்வுகளுக்காக கையளிப்பதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்ற நிலைக்கு மத்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories