தங்க ஆபரணங்களுடன் மூன்று பேர் கைது

Thursday, 23 January 2020 - 9:41

+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D++%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
5 கோடி ரூபா பெறுமதியான 5 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கம்  கட்டுநாயக்க விமான நிலையத்தில், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
 
இதன்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் இருவர் தெமட்டகொடை கிராண்ட்பாஸ் பகுதிகளை சேர்ந்த 28 வயதுடையவர்களாவர்.
 
மற்றுமொருவர், 13 வயதுடைய சிறுவன் என காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த ஒருவர் குறித்த தங்கத்தை வழங்கியுள்ளார்.
 
இந்த நிலையில், அவர்கள் விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியிலுள்ள  மலசலக்கூடத்தில் வைத்து குறித்த தங்கத்தை, கேகாலையை சேர்ந்த 13 வயதுடைய சிறுவனிடம் இருந்த பையில் இட்டு கடத்த முயற்சித்துள்ளனர். 
 
இந்த நிலையில், சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips