இலங்கையில் யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களை பிரதிநிதித்துவப் படுத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக, வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழவர் சுயாட்சி கழகத்தின் தலைவருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்தவராக உள்ள அனந்தி சசிதரன், எமது செய்தி சேவைக்கு இந்த தகவலை வழங்கினார்.
இதேவேளை, இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்த போதும், உடற் சிகிச்சை கருதி தாம் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதை தவிர்த்திருப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் எமது செய்தி சேவையிடம் கூறினார்.
தற்போது முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்தவராக உள்ள அனந்தி சசிதரன், எமது செய்தி சேவைக்கு இந்த தகவலை வழங்கினார்.
இதேவேளை, இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்த போதும், உடற் சிகிச்சை கருதி தாம் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதை தவிர்த்திருப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் எமது செய்தி சேவையிடம் கூறினார்.
Follow US
Most Viewed Stories