வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் கர்பிணி தாய் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வீட்டில் வழமையான வேலைகளை செய்துக்கொண்டிருந்த வேளையிலேயே இருபிள்ளைகளின் தாயான குறித்த கர்பிணி பெண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
அஸ்மா என்ற 30 வயதுடைய குறித்த பெண்ணின் கணவரின் சகோதரரே இவ்வாறு கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வீட்டில் வழமையான வேலைகளை செய்துக்கொண்டிருந்த வேளையிலேயே இருபிள்ளைகளின் தாயான குறித்த கர்பிணி பெண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
அஸ்மா என்ற 30 வயதுடைய குறித்த பெண்ணின் கணவரின் சகோதரரே இவ்வாறு கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow US
Most Viewed Stories