எம்பிலிபிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையை அனைத்து நவீன மருத்துவ வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கமை விரைவில் சப்ரகமுவ மாகாண சபையின் சுகாதார அமைச்சின் கீழ் குறித்த வைத்தியசாலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எம்பிலிபிட்டி பொது வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை குறிப்பிட்டார்.
இரத்தினபுரிய, அம்பாந்தோட்டை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலிருந்து நோயாளர்கள் இங்கு வருகை தருவதனால் இந்த வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமை விரைவில் சப்ரகமுவ மாகாண சபையின் சுகாதார அமைச்சின் கீழ் குறித்த வைத்தியசாலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எம்பிலிபிட்டி பொது வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை குறிப்பிட்டார்.
இரத்தினபுரிய, அம்பாந்தோட்டை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலிருந்து நோயாளர்கள் இங்கு வருகை தருவதனால் இந்த வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Follow US
Most Viewed Stories