கொள்ளையிடப்பட்ட நகைகளுடன் ஐவர் கைது (காணொளி)

Monday, 17 February 2020 - 15:09

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கொள்ளையிடப்பட்ட 20 பவுன் நகையுடன் ஐவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
 
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 450000 பெறுமதியான கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டதோடு குறித்த வீட்டில் தங்கியிருந்த சந்தேகத்துக்கிடமான அரியாலை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
 
கடந்த காலங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் வழிப்பறி மற்றும் நகைத் கொள்ளைகள் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினரால் குறித்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
கசந்தேக நபர்கள் 5 பேரும் 20 முதல் 25 வயது உடையவர்கள் எனவும் சந்தேக நபர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் எனவும் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips