அவுஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி மையத்திலிருந்து நேற்று காலை சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். இந்த விமானம் மங்களூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த மற்றொரு சிறிய ரக விமானத்துடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் 2 விமானங்களும் அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கின.
இந்த கோர விபத்தில் பயிற்சி விமானத்தில் இருந்த 2 பேரும், மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பேரும் பலியாகினர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். இந்த விமானம் மங்களூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த மற்றொரு சிறிய ரக விமானத்துடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் 2 விமானங்களும் அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கின.
இந்த கோர விபத்தில் பயிற்சி விமானத்தில் இருந்த 2 பேரும், மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பேரும் பலியாகினர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories