மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த சம்பவம் மவுசாகலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மதவாச்சி காவல்நிலையத்தில் பணியாற்றும் குறித்து காவல்துறை உத்தியோகத்தர் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை முன்னிட்டு விசேட சேவைக்காக மஸ்கெலியாவில் பணியாற்றியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கெப்பிட்டி கொல்லாவ பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் மவுசாகலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மதவாச்சி காவல்நிலையத்தில் பணியாற்றும் குறித்து காவல்துறை உத்தியோகத்தர் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை முன்னிட்டு விசேட சேவைக்காக மஸ்கெலியாவில் பணியாற்றியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கெப்பிட்டி கொல்லாவ பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories