இன்றைய தினம் மக்களின் பாவணைக்கு கையளிக்கப்பட்ட மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேகப்பாதையில் பேருந்து சேவைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் முதற் கட்டமாக 10 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முதலாவது பேருந்து சேவை நாளை முற்பகல் 8.30 அளவில் ஹம்பாந்தோட்டையிலிருந்து பயணிக்கவுள்ளது.
இதற்கான பேருந்து கட்டணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு கோட்டை வரையில் 880 ரூபா அறவிடப்படவுள்ளது.
அத்துடன் தங்காலை முதல் கோட்டை வரையில் பயணிக்கும் பயணிகளிடம் 680 ரூபா அறிவிடப்படவுள்ளது.
அத்துடன் ஹம்பாந்தோட்டை முதல் மாக்கும்புர வரையில் 810 ரூபாவும் தங்காலை முதல் மாக்கும்புர வரையில் 610 ரூபாவும் அறிவிடப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories