இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்...!

Thursday, 27 February 2020 - 15:30

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...%21
சூரியவௌ மைதானத்தில் பார்வையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவால் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு இந்த பணிப்புரை விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள அமைச்சர் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு துறையை மதிக்கும் நாட்டில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றமை கவலைக்குரிய விடயமாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை முன்னெடுத்து தனக்கு அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பிரத்தியேகமாக தம்முடன் கலந்துரையாடியதுடன், உடனடியாக அது தொடர்பில் ஆராயுமாறு ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிப்பதற்கு துரித நடவடிக்கை முன்னெடுப்படும்.

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் சூரியவௌ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியை பார்வையிட வந்த ரசிகர்கள் மீது, அனுமதி சீட்டு பெறும் கரும பீடத்தில் தாக்ககுதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips