நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக இதுவரையில் 5 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் 54 ஆயிரத்து 864 குடும்பங்களை சேர்ந்த இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது,
கேகாலை, இரத்தினபுரி,கண்டி, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேல், வட மேல் மாகாணங்களிலும் மன்னார், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான வெப்பநிலை காணப்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த வெப்பமான காலநிலை குறித்து மக்கள் அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
Follow US
Most Viewed Stories