கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமான மருதானை - இமாமுல் அரூஸ் மவாத்தையை சேர்ந்த 73 வயதான நபரின் இறுதிக் கிரியை இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கொட்டிகாவத்தை முல்லேரியா தகனசாலையில் அவரின் உலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தகனம் செய்வதற்கு முன்னர் அவரின் உடலத்தை உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரின் இறுதிக் கிரியை காவல்துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பில்; இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமானவர் வசித்துள்ள மருதானை - இமாமுல் அரூஸ் மவாத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு வசித்து வரும் 230 குடும்பங்களை சேர்ந்த 819 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முந்தைய பதிப்பு...
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.
73 வயதுடைய மருதானை பகுதியை சேர்ந்த ஒருவரே அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கொரோனாவால் ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இவர் மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதலாவதாக 60 வயதுடைய மாராவில் பகுதியை சேர்ந்த ஒருவரே மரணமடைந்திருந்தார்.
சுற்றுலா பயணிகளின் வழிகாட்டியாக செயற்பட்ட குறித்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருந்ததோடு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்ப்பட்டிருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 30 ஆம் திகதி பிற்பகல் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொச்சிக்கடை போருதொட்டை பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸினால் இதுவரை இலங்கையில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்பதோடு, சந்தேகத்திற்கிடமான முறையில் 231 பேர் காணப்படுகின்றனர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொட்டிகாவத்தை முல்லேரியா தகனசாலையில் அவரின் உலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தகனம் செய்வதற்கு முன்னர் அவரின் உடலத்தை உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரின் இறுதிக் கிரியை காவல்துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பில்; இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமானவர் வசித்துள்ள மருதானை - இமாமுல் அரூஸ் மவாத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு வசித்து வரும் 230 குடும்பங்களை சேர்ந்த 819 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முந்தைய பதிப்பு...
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.
73 வயதுடைய மருதானை பகுதியை சேர்ந்த ஒருவரே அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கொரோனாவால் ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இவர் மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதலாவதாக 60 வயதுடைய மாராவில் பகுதியை சேர்ந்த ஒருவரே மரணமடைந்திருந்தார்.
சுற்றுலா பயணிகளின் வழிகாட்டியாக செயற்பட்ட குறித்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருந்ததோடு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்ப்பட்டிருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 30 ஆம் திகதி பிற்பகல் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொச்சிக்கடை போருதொட்டை பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸினால் இதுவரை இலங்கையில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்பதோடு, சந்தேகத்திற்கிடமான முறையில் 231 பேர் காணப்படுகின்றனர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories