கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்றைய தினம் ஈரானில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மதுபானம் அருந்திய 3000 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு நீதித்துறை செய்தி பேச்சாளர் Gholam Hossein Esmaili தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினை மது அருந்துவதன் மூலம் குணப்படுத்தலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அது ஆபத்தினை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் ஈரானில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மதுபானம் அருந்திய 3000 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு நீதித்துறை செய்தி பேச்சாளர் Gholam Hossein Esmaili தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினை மது அருந்துவதன் மூலம் குணப்படுத்தலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அது ஆபத்தினை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories