நோர்வே எண்ணெய் உற்பத்தியாளர் போராட்டம்
2012 ஜூலை மாதம் 10 செவ்வாய்க் கிழமை- பி.ப 01:38
நோர்வேயில் கடற்பகுதியில் கனிய எண்ணெய் உற்பத்தி பணியாளர்கள் கடந்த 16 நாட்களாக மேற்கொண்டு வந்த பணிநிறுத்தம் நோர்வே அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
அவசர சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியதன் ஊடாகவே இந்த பணிநிறுத்தத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமது பொருளாதாரத்தின் அத்தியாவசிய பகுதியான எண்ணெய் உற்பத்தியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே தெரிவித்துள்ளது.
கடந்த மாதயிறுதியிலிருந்து உற்பத்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதன்காரணமாக பல எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
தமது ஓய்வூதிய கொடுப்பனவு உரிமையை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே பணியாளர்கள் பணிநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதற்காக தேசிய வேதன சபையின் ஊடாக அரசாங்கத்தினுள் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவசர கால சட்டத்தின் கீழ் நோர்வே எண்ணெய் உற்பத்தி பணியாளர்கள் அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதனடிப்படையில், இன்று தொடக்கம் நோர்வேயில் கனிய எண்ணெய் உற்பத்திகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
