


சிரியாவில் இருந்து, ஜோர்தானுக்கு தப்பி சென்ற ஆறு வயது சிறுவன் ஒருவனை, சிரிய பாதுகாப்பு தரப்பினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்க்படுகிறது.
சிரியாவில் கடந்த 17 மாதங்களாக இடம்பெற்று வருகின்ற மோதல்களில், முதல் தடவையாக சிரிய எல்லைப் பாதுகாப்பு தரப்பினரால் சிரிய பொதுமகன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
சிரியாவில் தொடர்சியாக வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கிருந்து தப்பி செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரையில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அகதிகளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.