


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மீண்டும் அணியில் நிலைக்க முயற்சிக்க போவதாக என, இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. பின் கணுக்கால் உபாதைக்கு உள்ளான அவர் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பின், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெறவுள்ளார்.
இரண்டு அணிகளும் பங்கு கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ம் திகதி ஐதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.