


ஆப்கானிஸ்தானில் உள்ள அமரிக்க வான்படைத்தளம் மீது உந்துகனை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
இதன்போது அமரிக்க உயர் இராணுவ அதிகாரி பயன்படுத்தும் வானூர்தி சேதம் அடைந்துள்ளது
குறித்த வானூர்தி தளத்தை பார்வையிட சென்றநிலையில் அவருடைய வானூர்தி தரையிறக்கப்பட்ட வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
எனினும் இந்த சம்பவத்தின் போது உயரதிகாரியான ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமரிக்க படைகளின் கூட்டு படையதிகாரி மார்டின் டெம்சே வானூர்தியின் அருகில் இருக்கவில்லை
எனவே அவருக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை எனினும் இரண்டு அமரிக்க வான்படை வீரர்கள் காயமடைந்தனர்