அண்மையில் டெல்கியில் குழு ஒன்றினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பலியான மருத்துவ மாணவியின் உண்மையான பெயரை வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்திய பிரதி அமைச்சர் சசி தரூர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்
கடந்த வருடம் டிசம்பர் 16ம் திகதி குறித்த மாணவி டில்கியில் பேருந்து ஒன்றினுள் வைத்து ஆறு பேரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
அத்துடன் அவரும்இ அவருடைய நண்பரும் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுஇ பாதையில் தூக்கி எறியப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.
பின்னர் குறித்த மாணவி சிங்கபூர் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட போதும்இ சிகிச்சை பல் இன்றி உயிரிழந்தார்.
அதன்பின்னர் இந்தியாவின் பாலியல் வன்புணர்வுக்கு எதிரான சட்ட மூலத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையிலும் அவரது பெயர் விபரங்களை வெளியிடாமல் இந்த நாட்டின் சட்டத்திட்டங்கள் காணப்படுகின்றன.
எனினும் அவரது உண்மையான பெயர் விபரங்களை வெளியிடுவதன் ஊடாகஇ அவரை கௌரவிக்க முடியும் என்று தசீ தரூர் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories