டில்கியில் மருத்து மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதன் போரில் கைதானவர்களுள் 5 பேரின் மீது கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் 16ஆம் திகதி குறித்த பெண்ணை பேருந்து ஒன்றினுள் வைத்து அவர்கள் குழுவாக சேர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர்.
அந்த மாணவி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைதானவர்களுக்கு எதிராக இவ்வாறு மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த சந்தேக நபர்களுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுவதற்கு இந்தியாவின் எந்த சட்டத்தரணியும் முன்வரவில்லை.
இதற்கிடையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறாவது சந்தேக நபர் 18 வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவரது எலும்பை கொண்டு வயதை கணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories