தெற்கு சீன கடற்பரப்பில் உரிமை கோரப்படும் பிரதேசம் குறித்து பிலிப்பீன்ஸ் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து பிலிப்பீன்ஸ் ஐக்கிய நாடுகளின் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக பிலிப்பீன்சின் வெளி விவகார செயலாளர் அல்பேட் டெல் ரொசாரியோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான சகல ராஜதந்திர நடவடிக்கைகளும் தோல்வி கண்டுள்ள நிலையிலேயே தமது அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுடன், இந்த நீண்ட கால பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு ஒன்றை எட்ட முடியும் என வெளிவிவகார செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories