அரசாங்கத்தை நிர்வாகத்தை நடத்திச் செல்வது தொடர்பாக, முடிந்தால் மக்கள் கருத்து கணிப்புக்களை நடத்துமாறு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ சவால் விடுத்துள்ளார்.
காலியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் காலத்தை நீடிக்க மக்கள் கருத்து கணிப்புக்கள் நடத்தப்பட வேண்டும்.
முடிந்தால் அதனை நடைமுறைப்படுத்துமாறு நான் சவால் விடுக்கின்றேன்.
நாட்டில், மூன்று தேர்தல் முறைமைகள் காணப்படுகின்றன.
ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மக்கள் கருத்து கணிப்புக்கள் ஆகியனவே அந்த தேர்தல்களாகும் என எதிர்கட்சி தலைவர் ரணி;ல் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories