கிணற்றில் வீழ்ந்த சிறுவன் பலி

Saturday, 02 February 2013 - 13:21

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF

ஏறாவூர் - மணியபுரம் பிரதேசத்தில் குடிநீர் கிணற்றில் விழுந்த மூன்றரை வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கிணற்றில் தவறி வீழ்ந்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மிதந்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர், களனி - ஹிம்புடுவெல்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடற்பரப்பில் மீட்கப்பட்ட பெண் சடலம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிலாபம் - முகுனுவடவன குளத்தில் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips