மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் இருந்து 124 மனித மண்டையோட்டுடனான எலும்பு கூடுகள் மீட்பக்கட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை ஆதார வைத்திய சாலையின் நிபுணர் அஜித் ஜயசேனவின் தலைமைகள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குற்றத்தடுப்பு பிரிவினரின் உதவியும் இதற்கு கிடைக்கப்பெறுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது அங்கு தலையற்ற 13 எலுப்பு கூடுகளும் மீட்பக்கட்டுள்ளன.
இந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குறித்து விசாரணை நடாத்த மேலதிக குழுவொன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடாத்தப்பட்ட விசாரணைகளில் மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Follow US
Most Viewed Stories