பாகிஸ்தான் பெஷாவரில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் 7 பேர் பலியானர்.
பெஷாவாரில் உள்ள பழங்குடியினருக்கு சொந்தமான அரச கட்டிடம் ஒன்றிலே இந்த வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதில், அரசியல் வாதிகளின் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, உற்புகுந்த இரண்டு பயங்கரவாதிகள் குண்டை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த இரண்டு பயங்கரவாதிகள் உட்பட ஏழு பேர் பலியாகினர்.
Follow US
Most Viewed Stories