கடந்த செவ்வாய் கிழமை காலமான வெனிசுலா ஜனாதிபதி யுகோ சாவோச்சிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது அனுதாபத்தினை தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் உள்ள கியூபா தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
காலஞ்சென்ற வெனிசுலா ஜனாதிபதி யுகோ சாவோச்சியுடன் இடம்பெற்ற பல்வேறு சந்திப்புக்கள் குறித்து, அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
Follow US
Most Viewed Stories