தமிழீழ ஆதரவாளர்களின் ஒழுங்கமைப்பான டெசோ எதிர்வரும் 12ம் திகதி நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கோரியுள்ளார்.
அண்மையில் லோக்சபாவில் இடம்பெற்ற விவாதத்தின் போது, பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் இலங்கை தமிழர்களுக் ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தன.
இதனை வரவேற்றுள்ள கருணாநிதி, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் மற்றும் அரச பேருந்துகளும் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும், மத்திய அரசாங்கம் தொடரூந்து மற்றும் விமான சேவைகளையும் இடைநிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அத்துடன் அன்றைய தினத்தை மத்திய அரசாங்கம் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
Follow US
Most Viewed Stories