இந்தியர்கள் பலி

Tuesday, 26 March 2013 - 14:06

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF

 


மத்திய ஆபிரிக்காவின் தலைநகரில் காவல் கடமையில் ஈடுப்பட்டிருந்த பிரான்ஸ் படைவீரரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் இரண்டு இந்தியர்கள் பலியாகினர்.
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு இந்த செய்தினை வெளியிட்டுள்ளது.
மத்திய ஆபிரிக்கவின் தலைநகரில் உள்ள வானூர்தி நிலையத்திற்கு சட்டவிரோதமான நுழைய முற்பட்ட மூன்று ஈருருளிகளை நோக்கி பிரான்ஸ் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போதே குறித்த இந்தியர்கள் இருவரும் பலியானதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய ஆபிரிக்காவில் இடம்பெற்று வரும் சிவில் தாக்குதலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் துருப்பினர் அங்கு கடமையில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips