இலங்கை வீரர்களை நீக்க வாய்ப்பு

Tuesday, 26 March 2013 - 14:08

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குகொள்ளும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களை நீக்குவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையில் இடம்பெறும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் விளையாட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
நுவன் குலசேகர மற்றும் அகில தனஞ்ஜய ஆகிய இலங்கை வீரர்கள் இந்த முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சென்னை அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் 6ஆம் திகதி மும்பை அணியுடன் தமது முதல் போட்டியில் பங்கேற்கவுள்ளது.
இதனிடையே, இலங்கை வீரர்களான குமார் சங்கார, மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க, அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் இந்த முறை ஏனைய இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips