உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் 4 ஆயிரத்து 334 மீட்டர் உயரத்தில்; காணப்படும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது.
எனினும் தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிப்பதற்கும், நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும் அரசியல் அமைதியின்மையைக் கண்காணிக்கவும் 4 ஆயிரத்து 411 மீட்டர் உயரத்தில் புதிய விமான நிலையம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது.
டயோசெங் யாடிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் பொது விமான நிலையம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
Follow US
Most Viewed Stories