கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு வலையம், முதலீட்டு சபை மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த தொழிற்சாலையை முதலீட்டு சபையே நடத்திச் செல்லும்.
அரசாங்கமும் ஏனைய நிறுவனங்களும் 49 சதவீத உரிமையை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.