தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஆய்வு பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து இலங்கை சீனி இறக்குமதியை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இதற்கு குறித்த உடன்படிக்கை உதவியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தாய்லாந்து சென்று பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.