வடக்கு ,கிழக்கிற்கு இலங்கை வாநூர்தி பயிற்சி கல்லூரியின் நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டம்...

Sunday, 26 February 2017 - 19:58

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%2C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...
இலங்கை வாநூர்தி பயிற்சி கல்லூரியின் நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்லூரியின் பொது முகாமையாளர் பிரிமால் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் பயற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், வடக்கு கிழக்கு பிரதேசங்களில், வாநூர்தி துறையில் ஈடுபாடு உடைய இளைஞர்கள் பெரிதும் நன்மை பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்த தலா 20 பயற்சியாளர்கள் ஒவ்வொரு பாட விதானத்திற்காகவும் தெரிவு செய்யப்படுவர்.

இலங்கை வாநூர்தி பயிற்சி நிலையம் கடந்த 2012ஆம் ஆண்டு முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

இது தவிர, எதிர் காலத்தில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து உயர்மட்ட வாநூர்தி பயிற்சிகளை வழங்கவும் கல்லூரி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







Exclusive Clips