அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு உயர் ரக கால்நடைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கியல் இந்த கால்நடைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதற்கமைய எதிர்வரும் மே மாதத்தில் சுமார் 5 ஆயிரம் உயர் ரக கால்நடைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மே மாதத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற உயர்ரக பசுக்கள் கால்நடை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ஆறாயிரம் கால்நடைகள் அரச கால்நடை பண்ணைகளில் வளர்க்கப்பட்டுவருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.