இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரையிலான காலப்பகுதியில், கொழும்பு – தென்கிழக்காசிய நாடுகளுக்கான வானூர்தி சேவைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்தியாவின் வங்காள விரிகுடா பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள வானூர்தி பயிற்சியின் பொருட்டே இந்த சேவை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை நோக்கி வரும் பல வானூர்தி சேவைகள் மற்றப்படவுள்ளன.
இதன்படி, மலேசியா, இன்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து புறப்படும் மற்றும் அந்த நாடுகளுக்கு செல்லும் சேவைகளில் மாற்றம் ஏற்படும் என ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை வானூர்தி சேவைக்கு சொந்தமான 11 வானூர்திகளின் பயண நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.